பட்டப் பகலில் அரசியல்வாதி சுட்டுக்கொலை!

பட்டப் பகலில் அரசியல்வாதி சுட்டுக்கொலை!

 டி.இ.முகமது இர்பான்,

  ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அங்கு ஒரு அமைப்பைச் சேர்ந்தவர் சுட்டுக்கொள்ளப்பட்டார்.

   ராஜஸ்தான் மாநிலத்திலுல்ள ஜெய்ப்பூரில் வலதுசாரி ஆதரவு அமைப்பான ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுகதேவ் சிங் கோககெடி மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.   சுகதேவ் தனது வீட்டில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென புகுந்த 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியது.

  அதில், சுகதேவ் சிங் கோகமெடியும், மர்ம கும்பலை சேர்ந்த ஒருவனும் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.

சுகதேவ் உடன் பேசிக் கொண்டிருந்த நபர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பட்ட பகலில் நடந்த இந்த துப்பாக்கி சூடுக்கு அரசில் பின்னணி இருக்குமோ என்று போலிசார் சந்தேகிக்கிறார்கள். அந்த கோணத்தில் விசாரணையையும் துவங்கியுள்ளனர்.