ரயில் மூலம் வேலூர் வந்தார் முதல்வர் மு க ஸ்டாலின்

ரயில் மூலம் வேலூர் வந்தார் முதல்வர் மு க ஸ்டாலின்

 இலங்கைத் தமிழர்களுக்காக கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி மற்றும் வேலூர் அடுத்த கந்தனேரியில் திமுகவின் ஐம்பெரும் மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

 அதில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும்,தமிழக முதலமைச்சருமான மாண்புமிகு மு .க. ஸ்டாலின் அவர்கள் இன்று மாலை ரயில் மூலமாக வேலூர் வந்து சேர்ந்தார்.

இன்று இரவு மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான திரு ஏ பி நந்தகுமார் அவர்களுக்கு சொந்தமான அனுகுளாஸ் ஹோட்டலில் தங்குகிறார்.

நாளை காலை நடந்து சென்று பொது மக்களை சந்திக்கிறார் பின்னர் இலங்கை தமிழர்களுக்கு வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கந்தனேரியில் உள்ள கட்சி நிகழ்ச்சியில் கொடி ஏற்றிவிட்டு மீண்டும் வேலூர் திரும்பி முக்கிய பிரமுகர்களை சந்திப்பது உடன் மாலை கட்சி விழாவில் கலந்து கொண்டு விட்டு ரயில் மூலமாக சென்னை திரும்புகிறார்.