ரவுடி சுட்டுக்கொலை!

ஜி.சாந்தகுமார்,
காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்குவார் சத்திரம் என்ற பகுதியில் ரவுடியை போலிசார் சுட்டு கொன்றனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய முன்னாள் தலைவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் ரவுடி விஷ்வா, தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலிசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் சுங்குவார் சத்திரம் ஸ்ரீபெரும்பத்தூர் அருகே உள்ள சோகண்டி பகுதியில் பதுங்கியிருப்பதாக போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவனை போலிசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது போலீசாரை தாக்கி விட்டு, ரவுடி விஷ்வா தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. போலிசார் தற்காப்புக்காக சுட்டதில் ரவுடி விஸ்வா பலியானார்.
வேலூர் அண்ணா சாலையில்