நம் வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்! அமைச்சர் மூர்த்தி சபதம்!

தேனி ரபீக்,
நம் வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் இல்லையென்றால் நான் என் அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் மறுநாளே ராஜினாமா செய்வேன் என்று பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சபதம் ஏற்று உள்ளார்.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பாக தங்கம் தமிழ்ச்செல்வம் உதயசூரியன் சின்னத்திலும், அதிமுக சார்பாக நாராயணன் என்பவர் இரட்டை இலை சின்னத்தில், அ.ம.மு.க. பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பாக மதன் ஜெயபால் (சின்னம் இன்னும் தெரியவில்லை)ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அப்படி இருக்க திமுக வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வத்தை அறிமுகப்படுத்தும் நிர்வாகிகள் கூட்டம் தேனியில் நடைபெற்றது.
அப்போது அதில் பங்கேற்ற பத்திர பதிவுத்துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான மூர்த்தி மிகுந்த ஆவேசத்துடன் பேசினார்.
அவர் பேசியதாவது:-இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக நம் தொகுதியை கண்கொத்தி பாம்பாக பார்க்க வேண்டும்.
நமது வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வத்தை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்காக நாம் கடுமையாக களப்பணி ஆற்ற வேண்டும்.
அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்றால் நான் என்னுடைய மந்திரி பதவியும் மாவட்ட செயலாளர்கள் பதவியையும் மறு தினமே ராஜினாமா செய்வேன் என்று சபதம் ஏற்றார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர.பி. உதயகுமார் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.
அவர் அதிமுக நிர்வாகிகளின் மத்தியில் பேசுகையில், தேர்தல் முடிவு வரும் வரை ஏன் மூர்த்தி காத்திருக்க வேண்டும் அவரது வேட்பாளர்கள் எப்படியும் தோற்கத்தான் போகிறார் ஆகவே அமைச்சர் மூர்த்தி இன்று அவரது பதவியை ராஜினாமா செய்யலாமே என்று கிண்டல் அடித்து என்று பேசினார்.