இன்னும் 6 மாதத்திற்குள் எல்லா கிராமங்களுக்கும் தண்ணீர் வசதி! அமைச்சர் துரைமுருகன் வாக்குறுதி!

 ஜி.கே.சேகரன்,

  காவிரி தண்ணீரை காட்பாடி அனைத்து கிராமங்களுக்கும் தர அமைச்சர் நேருவிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேச்சு.

  வேலூர்மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் திராவிட முன்னேற்ற கழகத்தின் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இதில்  கைத்தறி துணி நூல்துறை அமைச்சர் காந்தி, வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 இக்கூட்டத்தில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு வேட்பாளர் ஜெகத்ரட்சகனை அறிமுகம் செய்து வைத்து பேசுகையில்:-  அமைச்சர் நேருவிடம் சொல்லியுள்ளேன். இன்னும் 6 மாததிற்குள் எல்லா கிராமங்களுக்கு காவிரி தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென கூறியுள்ளேன் அதுவும் வரும்.

 கன்னியாகுமரியிலிருந்து கும்மிடிபூண்டியில் இருந்து எல்லா ஏரிகள் ஆறுகளை பார்க்க வேண்டும். 600 கோடியில் வெள்ளத்தால் உடைப்பான ஏரிகளை சீரமைத்து வருகிறோம்.

 தேவகவுடா பிரதமராக இருந்த போது தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீரை வேண்டுமானாலும் கொடுக்கிறேன் ஆனால் மேகதாதுவை மட்டும் கட்டிகொள்ள அனுமதி கொடு என்று என்னிடம் கேட்டார். அதற்கு கலைஞரிடம் நான் தேவகவுடா சொன்னதை சொன்னேன், அதற்கு அவர் உன் தலையை வெட்டி அவர் கிரிடம் வைக்கிறேன் என சொல்கிறார் என சொன்னார்.

  நான் தேர்தலில் காட்பாடியில் நின்ற போது சொன்னேன் நான் ஜெயித்தால் காட்பாடியில் தான் இருப்பேன் என ஆனால் கலைஞர் சொன்னார் துரைமுருகன் ஜெயித்தாலும் சென்னைக்கு தான் சட்டமன்றத்திற்கு வரவேண்டும் என்று.

 12 முறை என்னை இந்த தொகுதியில் ஜெயிக்க வைத்தீர்கள் 13 ஆவது தடையும் என்னை ஜெயிக்க வைப்பீர்கள் என்னை வளர்த்த தொகுதி மக்களாகிய நீங்கள் இந்த தேர்தலில் ஜெகத்ரட்சகனை ஜெயிக்க வைக்க வேண்டும் என பேசினார்.