ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக எட்டு பேர் சரண்டர்! பழிக்கு பழியா? என்று விசாரணை…. போலிசார் குவிப்பு!!

ம.பா.கெஜராஜ்,
கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு நடைபெற்றது. பின்னர் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் வைக்கப்படுகிறது. இதனால் அங்கு போலிசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை செம்பியத்தில் உள்ள தனது வீட்டின் முன் நின்றிருந்த போது கொல்லப்பட்டார். அப்போது இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.
இரத்த வெள்ளத்தில் மிதந்தவரை அப்படியே போட்டுவிட்டு அந்த மர்மக் கும்பல் தப்பியோடியது. ஆ¢ம்ஸ்ட்ராங் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை காவல் துறையினர் 6 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
அப்படியிருக்க பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் காவல் துறையில் சரண்டைந்தனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன் சரணடைந்துள்ளனர்.
சரணடைந்த 8 பேரையும் கைது செய்த காவல் துறையினர் இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள புண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் மீது தமிழ்நாடு, ஆந்திராவில் கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. எட்டு முறை குண்டர் சட்டதில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது நண்பர் மாதவனுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரை மணலில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது மர்ம நபர்களால் வெட்டி வீசப்பட்டார்.
இந்த சம்பவத்தில் ஆற்காடு சுரேஷ் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். உயிருக்கு போராடிய மாதவன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று உடல் நலம் தேறினார். இந்நிலையில் ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்டார்.
ஆற்காடு சுரேஷ் கொலை பின்னணியில் ஆ¢ம்ஸ்ட்ராங்கின் பங்கு இருப்பதாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு சந்தேகப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக தான் ஆ¢ம்ஸ்டாரங் கொலை சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சரணடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களில் ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ்,அருள் ஆகிய 8 பேரிடம் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகமெங்கும் ஆர்பாட்டம்.
ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகமெங்கும் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆர்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்களை நடத்தினர். அந்த வகையில் திருவள்ளை,திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், திருவாரூர், உளுந்தூர் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படங்கள் அ.ஜோ,