கொலைக்கு பயன்பட்ட கத்திகளை ஆற்காடு சுரேஷின் படத்துக்கு படையல் போட்ட கொலையாளிகள்! பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் சாகடிக்கப்பட்டாரா! ஆறாத ஆருத்ரா!!

ம.பா.கெஜராஜ்!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்து விட்டு, கொலைக்கு பயன்பட்ட கத்தியை ரத்தக்கறையுடன் ஆற்காடு சுரேஷின் உருவப்படத்தில் கொலை கும்பல் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் என்பதால் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றுவிட்டு கத்தியை வைத்தோம் என்று வாக்கு மூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
நேற்று "வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணிக்கு செம்பியம் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை (52) அவரது வீட்டின் முன்புமாறு பேர் கொண்ட கத்தியால் வெட்டி விட்டு தப்பினர்..
கொலை செய்த பிறகு பதற்றத்தில் 3 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பட்டா கத்தியையும் சம்பவ இடத்திலேயேவிட்டு சென்றனர்.
தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, காயம் அடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆம்ஸ்ட்ராங் இறந்து விட்டதாக அறிவித்தனர். இது தொடர்பாக, இறந்த ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் வீரமணி கொடுத்த புகாரின் பேரில் செம்பியம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள், சம்பவ இடத்தின் செல்போன் டவர்களை ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் பொன்னை பாலு, திருவேங்கடம், சந்தோஷ், ராமு, திருமலை, மணிவண்ணன், செல்வராஜ் மற்றும் அருள் ஆகிய 8 பேர் திருவள்ளூர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவருடன் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார்.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போலிசாருக்கு அதிர்ச்சித்தகவல்கள் கிடைத்துள்ளன.
அதில் பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை என்பவன் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் போட்டு கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் வீடு உள்ள பகுதியில் இருக்கும் பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல ஒருவாரமாக நோட்டமிட்டு வந்த திருமலை, ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி தான் கட்டி வரும் வீட்டருகே குறைந்த அளவிலான நண்பர்களுடன் வருவதை நோட்டமிட்டு புன்னை பாலுவுக்கு தகவல் கொடுத்துள்ளதாகவும், இதன்பிறகே கொலை சம்பவம் நடத்தப்பட்டதாகவும் தெரிய வந்திருக்கிறது.
மேலும், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்து விட்டு, கொலைக்கு பயன்பட்ட கத்தியை ரத்தக்கறையுடன் ஆற்காடு சுரேஷின் உருவப்படத்தின் அருகே கொலை கும்பல் வைத்து படையல் போட்டனராம். நேற்று ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் அவரை கொன்றதாகவும் குற்றவாளிகள் சொன்னதாக போலிஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. 18.08.2023 ஆம் தேதியன்று ஆற்காடு சுரேஷ் கொலையானபோதே இதற்கான சபத்தை அவர்கள் எடுத்துக் கொண்டார்களாம்.
ஆருத்ரா நிதி நிறுவனம் தொடர்பாக சுரேஷிக்கும் ஆம்ஸ்ட்ராங்குக்கும் விரோதம் ஏற்பட்டதாலேயே இந்த கொலைகள் நடந்திருக்கின்றன.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து என உளவுத்துறையும், குற்றப்புலனாய்வு பிரிவும் 3 முறை எச்சரித்ததாக தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் குத்துச்சண்டை தெரிந்தவர் என்பதால் அவரை எவ்வாறு கொலை செய்வது என திட்டமிட்டு கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதோடு உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் பாதுகாப்புக்காக உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருந்தார் ஆம்ஸ்ட்ராங்.
ஆம்ஸ்ட்ராங்கின் கவனத்தை திசை திருப்பி பின்புறமாக இருந்து இடது பக்கமாக கழுத்தில் கொலையாளிகள் வெட்டியுள்ளனர்.
கணுக்காலில் வெட்டி நிலைகுலையச் செய்த பின் சரமாரியாக வெட்டியதில், ஆம்ஸ்ட்ராங்கின் இடது கழுத்தின் மேல் பகுதி, காது, இடது சுண்டு விரல் துண்டானதாக கூறப்படுகிறது.
இவ்வளவு கதைகள் வெளியாகி வரும் நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல என்று திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டத்தன் எதிரொலியாக வட சென்னை பகுதி போக்குவரத்துக்கு பிரச்சனை ஏற்பட்டது. நாளை பகுஜன் சமாஞ் கட்சியின் தலைவர் செல்வி மாயாவதி சென்னை வருகிறார். அவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்.
இந்நிலையில் அவரது உடல் பொது மக்கள் பார்வைக்காக தனியார் பள்ளியில் வைக்கப்படுகிறாது. பின்னர் பெரம்பூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. இவற்றுக்காக தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.