ரம்ஜான் இனாம் பெற கூட்டம்:-நெரிசலில் சிக்கி 80 பேர் பலி!

ரம்ஜான் இனாம் பெற கூட்டம்:-நெரிசலில் சிக்கி 80 பேர் பலி!

ம.பா.கெஜராஜ்,

நாளை மறுதினம் கொண்டாடப்படவுள்ள ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏமன் தலைநகர் சனாவில் உள்ள பள்ளி ஒன்றில் இனாம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட மோதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, இனாம் விநியோக பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் 13 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சனாவில் உள்ள சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

   கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஹௌதி போராளிகள் வானை நோக்கி சுட்டதாகவும், அப்போது, மின்கம்பியை தோட்டா தாக்கியதில் வெடிப்பு ஏற்பட்டது என்றும் இதனால் மக்கள் பீதியடைந்து அங்குமிங்கும் ஓடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த இரண்டு பேர் தெரிவித்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

 முஸ்லிம் மக்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் இறுதி நாட்களில் இந்த நிகழ்வு நடந்துள்ளது அம்மக்களை மட்டுமின்றி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.