அரசு மருத்துவமனையில் ஆட்சியர்!

 அரசு மருத்துவமனையில் ஆட்சியர்!

ஜி.கே.சேகரன்,

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உடலியல் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் ரூ.8 லட்சம் மதிப்பில் செயற்கை கால்களை மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி அவர்கள் வழங்கி மருத்துவமனையை ஆய்வு செய்தார்.

 வேலூர்மாவட்டம், அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடலியல் மற்றும் மறுவாழ்வுத்துறையின் சார்பில் ரூ.8 லட்சம் மதிப்பில் செயற்கை கால்களை கால்களை இழந்தவர்கள் 9 பேருக்கு  மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பாப்பாத்தியம்மாள்,உடலியல் மற்றும் மறுவாழ்வுத்துறை தலைவர் ஜெயசீலி உள்ளிட்டோர் இருந்தனர்.

 பின்னர் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவையும் ஆட்சியர் சுப்பு லெட்சுமி ஆய்வு செய்தார் நோயாளிகளுக்கு சரியாக சிகிச்சைகள் அளிக்கபடுகிறதா என்பதையும் ஆட்சியர் ஆய்வு செய்து கேட்டறிந்தார்.