எல்லா பத்திரிகைகளும் ஜால்ரா அடிக்குறீங்க! அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி டென்ஷன்!
ஜி.கே.சேகரன்,
அனைத்து பத்திரிகையாளர்களும் ஜால்ரா அடிக்கிறார்கள் என காட்பாடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆவேசம்
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் ஒரு துக்க வீட்டிற்கு வந்து சென்றார் முன்னாள் அமைச்சர் வேலுமணி.
அதன் பின்னர் வேலுமணியிடம் செய்தியாளர்கள் காவிரி தொடர்பான பிரச்சனை குறித்தும், பாஜக உங்களுக்கு வலைவிரித்திருக்கிறதா, ஆம்ஸ்ட்ராங் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் தவிர்த்த வேலுமணியிடம், சார் ஏன் சார் பிரஸ்ஸை பார்க்க பயப்படுகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதை பொறுமையாக கேட்டுக் கொண்டே காரில் ஏறி அமர்ந்த வேலுமணி, பின்னர் பத்திரிகையாளர்கள் பார்த்து பிரஸ்ஸை பார்ப்பதற்கு எப்பவும் பயப்படுவதில்லை, பிரஸ்ஸு எப்பவும் கரெக்டா போடுறீங்களா? பூரா ஜல்ரா தான் அடிக்கிறீங்க. அதற்கு பதில் சொல்லுங்க முதல்ல. எல்லா பிரஸிம் ஜால்ரா தான் அடிக்கிறீங்க.
எதிர்கட்சித்தலைவர் பேசுறத எங்கே போடுகிறீர்கள். அனைத்து ஊடகங்களும் ஜால்ரா அடிக்கிறீர்கள் கூறிக்கொண்டே நழுவிச் சென்றார்.