12 நக்சல்கள் சுட்டுக் கொலை! பாதுகாப்பு படையினர் அதிரடி!

12 நக்சல்கள் சுட்டுக் கொலை! பாதுகாப்பு படையினர் அதிரடி!

 நரேஷ்.என்,

 நேற்று சத்தீஸ்கர் மாநிலத்தில்  நடைபெற்ற என்கவுன்டரில் 12 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பஸ்தார் பகுதியில் நக்சலைட்கள் சக்தி வாய்ந்த வெடிகுண்டை கடந்த 6-ம் தேதி பதுக்கி வைத்தனர். இதில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் சிக்கியதில் டிரைவர் மற்றும் வீரர்கள் 8 பேர் இறந்தனர்.

  இந்நிலையில் பிஜப்பூரில் கடந்த 12-ம் தேதி பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு பெண்கள் உட்பட 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  அதே போல், பிஜப்பூர் பகுதியில் தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். அங்கு நேற்று காலை நடைபெற்ற குண்டு வெடிப்பில் இரண்டு வீரர்கள் சிக்கி காயம் அடைந்தனர்.

  இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இடையேயும் பிஜப்பூரில் நேற்று தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனா என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.