விஷ ஜந்தை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்! மூஞ்சூர்பட்டு மாடுபிடி!

ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே குடியிருப்பு பகுதியில் நுழைந்த 5 அடி நீளமுள்ள கண்ணாடிவிரியின் விஷப்பாம்பு அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியில் குடியிருப்புகள் பகுதிக்கு அருகே வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.
அதன் அருகில் சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாய் பகுதியில் இருந்து சுமார் 5 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் விஷபாம்பு குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை கண்ட பகுதி மக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர்.
இது குறித்து, அப்பகுதி வார்டு கவுன்சிலர் சுதாகர் என்பவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடிக்க முயன்ற போது விஷப்பாம்பு அங்குள்ள விவசாய நிலத்தில் புகுந்ததால் நீண்ட நேரம் போராடி அந்த கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்து அதனை கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர்.
கண்ணாடி விரியன் பாம்பு கடித்து அடுத்த நொடிகளிலே உயிரிழப்பு ஏற்படக்கூடிய விஷபாம்பினை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து எடுத்துச் சென்றதற்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மாடுபிடி
வேலூர்மாவட்டம், அடுக்கம்பாறை அருகேயுள்ள மூஞ்சூர்பட்டு கிராமத்தில் கானும் பொங்கலை முன்னிட்டு மஞ்சுவிரட்டு எனப்படும் காளைகளை ஓட விடும் திருவிழாவானது நடந்தது இதில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது குறைந்த நேரத்தில் மின்னல் வேகத்தில் ஓடி இலக்கை அடைந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டது இவ்விழாவில் ராணிப்பேட்டை,திருப்பத்தூர் வேலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடியது இந்த காளை விடும் விழாவினை ஆயிரக்கணக்கான மக்கள் காளை ஓடுவதை கண்டு ரசித்தனர்.