பெண் தலைமையில் பட்டாக்கத்தியுடன் காரில் வலம்! போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்ட கும்பல்!

கு.அசோக்,
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை அடுத்துள்ள பகுதிகளில் பட்டாக்கத்தியுடன் ஒரு கும்பல் காரில் சுற்றுவதாகவும், பொதுமக்களுக்கு அவர்கள் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அப்படியிருக்க சோளிங்கர் அருகே உள்ள பாராட்டி திரௌபதி அம்மன் கோயில் அருகே சோளிங்கர் காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் உதவி காவல் ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து சோதனை செய்தனர் சோதனையில் காரில் பட்டாக்கத்தியுடன் 4 இளைஞர்கள் மற்றும் ஒரு பெண்ணை விசாரித்தனர்.
இதில் பாராஞ்சியை சேர்ந்தவர்கள் சுதன் 27, தமிழ்செல்வி 22, விஜய் 24, விக்கி 19,செல்வமந்தையை சேர்ந்த ஞானப்பிரகாசம் 25என்பது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணையில் இவர்கள் ஏற்கேனவே பல்வேறு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக திட்டம் தீட்டுவதற்காக ஒன்றுகூடியதாக விசாரணையில் தெரியவந்தது.இதில் சுதன் மனைவியான தமிழ்செல்வி தப்பி ஓடிவிட்டார்.அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கத்தி மற்றும் கார் பறிமுதல் செய்தனர்.
நான்கு பேரையும் கைது செய்து அரக்கோணம் நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர் செய்து வேலூர் மத்திய சிறையில் அடித்தனர். மேலும் தலைமறைவான தமிழ் செல்வியை போலீஸ்சார் தேடிவருகின்றனர்