பொங்கல் விழாவில் பளு தூக்கி அசத்தல்!

பொங்கல் விழாவில் பளு தூக்கி அசத்தல்!

கு.அசோக்,

தைப்பொங்கல்  பண்டிகையை கொண்டாடும் வகையில் இளைஞர்கள் தங்கள் வீரத்தையும் திறமையும் வெளிப்படுத்தும் விதமாக பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டு அசத்தினர்.

   உழவர்களின் திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தைப்பொங்கல் தினம் தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

  அதன் ஒரு பகுதியாக நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியில் செயல்பட்டு வரும் சௌராஷ்ட்ரா பள்கார் சமூக நலச்சங்கத்தின் சார்பில் 6-ஆம் ஆண்டு பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

  இதில் சஷ்டியபத பூர்த்தி விழா, மகளிருக்கான விளையாட்டு விழா ஆண்களுக்கான பளு தூக்கும் போட்டி மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

  அப்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தும் விதமாக பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று 30 கிலோவில் இருந்து சுமார் 150 கிலோ வரை எடை பிரிவுகளின் கீழ் இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களுடைய  வீரத்தையும் திறமையும் வெளிப்படுத்தி அசத்தினார்கள்.