எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் ஆம்லெட் போட்ட முன்னாள் அமைச்சர்! இது என்ன லாஜிக்?

கு.அசோக்,

 முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு வாணியம்பாடியில் முட்டை ஆம்லெட் போட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி.

 முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதிமுக மாவட்ட அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, எம்.எல்.ஏ செந்தில்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 அப்போது கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

 இதனைத் தொடர்ந்து 30 வது வார்டு நியூடவுன் பகுதியில் மாவட்ட பிரதிநிதி உதயகுமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில்  முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மற்றும் எம்எல்ஏ செந்தில்குமார் பங்கேற்று அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை  செலுத்தினர்.

 பின்னர் முட்டை ஆம்லெட் போட்டு கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானத்துடன் ஆம்லெட் வழங்கினர்.

 நிகழ்ச்சியின் போது முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார், டாக்டர் பசுபதி, வாணியம்பாடி நகர கழக செயலாளர் சதாசிவம், உதயேந்திரம் பேரூராட்சி கழக செயலாளர் சரவணன், ஜோலார்பேட்டை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ரமேஷ், மணிகண்டன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 ஆனால் எதற்காக ஆம்லெட் போட்டு கொடுத்தார்? அது என்ன லாஜிக் என்பது தான் புரியவில்லை.

இராணிப்பேட்டை,

இராணிப்பேட்டை  மேற்கு மாவட்ட அதிமுக தலைமை மாவட்ட அலுவலகத்தில் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108-வது ஆண்டு பிறந்த நாளை அதிமுகவினர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகின்றது.

 இதனை முன்னிட்டு இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக தலைமை கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் ராணிப்பேட்டை, முத்துக்கடை, நவல்பூர் அதிமுக மாவட்ட தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் பூ மாலைகளால்  வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம்,

  முன்னாள் எம்ஜிஆர் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு குடியாத்தம் நகரம் ஒன்றியம்  சார்பாக ஊர்வலம் நடைபெற்றது.

    வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் இருந்து அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் திருவுருவ படத்துடன் தொடங்கிய ஊர்வலம் குடியாத்தம் புதிய, பேருந்து நிலையம், வழியாக சென்று காமராஜர் பாலம் அருகே உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  இந்த ஊர்வலத்தில் மாவட்ட செயலாளர் வேலழகன் உள்ளிட்ட  ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர் மேலும் ஊர்வலத்தில் அதிமுக மகளிர் அணியினர் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர்.