வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசு! முன்னாள் எம்.எல்.ஏ. சி.ஞானசேகரன் வழங்கினார்!

வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசு! முன்னாள் எம்.எல்.ஏ. சி.ஞானசேகரன் வழங்கினார்!

ஜி.கே.சேகரன்,

  திருப்பத்தூர் மாவட்டம்,  வாணியம்பாடி அருகே நடைபெற்ற மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது.இதில் உள்ளூர் , வெளி மாவட்ட மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இருந்து 200 க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்பு. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.ஞானசேகரன் பரிகள் வழங்கினார்.

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளை குட்டை பகுதியில் எருது விடும் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியசைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

 வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு வேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.ஞானசேகரன் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

  இதில் வேலூர், ஆம்பூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் வெளி மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து சுமார் 200க்கு மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடியது.

  காளைகள் மீது  இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மாட்டின் மீது கை போட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

  மேலும் விழாவிற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.