சீமான் விடுதலை புலி பிரபாகரன் சந்திப்பு போட்டோ? எடிட் செய்ததே இவர்தானாம்!

ஜி.சாந்த குமார்,
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் படப்பிடிப்புக்காக இலங்கை சென்ற போது அப்போது போர்களத்தில் இருந்த பிரபாகரனை சந்தித்தார் என்று போட்டோக்கள் வெளியிடப்பட்டது.
இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உள்ளிட்ட பலர் இது சும்மா என்று சந்தேகத்தை சொன்னார்கள்.
இந்நிலையில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இவர், (சீமான் பெயரைக் குறிப்பிடாமல்) அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.
அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்" என்று பதிவிட்டிருந்தார். .
இதனையடுத்து இது சம்பந்தமாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, அந்த காலகட்டத்தில் நான் ஒரு தனியார் தொலைகாட்சி சேனல் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தேன். அதே சேனலில் சீமானுக்கு நெருக்கமாக இருந்த ஒருவரும் அங்கு வேலை செய்துகொண்டிருந்தார். ஒருநாள் அவர்
பிரபாகரன் உடன் இயக்குநர்கள் மகேந்திரன் உள்ளிட்டோர் இருந்த புகைப்படங்களை ஒரு டிவிடியில் எடுத்துக் கொண்டு வந்தார்.
இவர், அவரை சந்திக்கவே இல்லை.
— Sankagiri RAJKUMAR (@Rajkumar_Dir) January 19, 2025
எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்.
அப்போது சீமானுடைய புகைப்படத்தையும் இந்த இரண்டு புகைப்படங்களையும் ஒன்றாக இணைத்து எடிட் செய்து தர வேண்டும் என்று என்னிடம் அவர் கூறினார்.
என்னால் முடிந்த அளவுக்கு அப்புகைப்படத்தை சிறப்பாக நான் எடிட் செய்து கொடுத்தேன். அந்த புகைப்படத்தை கவனித்தீர்கள் என்றால் சீமானுக்கு நிழல் வைத்திருப்பேன்.
பிரபாகரனுக்கு நிழல் வைக்க மறந்திருப்பேன். பின்னாட்களில் அந்த நண்பரை நேரில் சந்தித்த போது, 'அந்த புகைப்படம் வீட்டில் பிரேம் போடுவதற்கு என்று கூறினீர்கள். ஆனால் அது இப்போது வேறு மாதிரி போய்க் கொண்டிருக்கிறதே' என்று கேட்டேன். அதற்கு அவர், 'நம்முடைய புகைப்படத்தால் ஒரு அரசியல் தலைவரை
உருவாக்கியிருக்கிறோம். நல்ல விஷயம்தானே' என்று தெரிவித்தார். இவ்வாறு சங்ககிரி ராஜ்குமாரின் பேட்டி அமைந்திருந்தது.