பாலத்தில் சொறுகிக் கொண்டகொண்ட லாரி!

பாலத்தில் சொறுகிக் கொண்டகொண்ட லாரி!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,

  பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் லாரி சொறுகிக் கொண்டு விபத்து ஏற்பட்டது.     மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கிருஷ்ணாபுரத்தில் 1970-ம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் ஒன்று உள்ளது. பழைய பாலம் என்பதால் இந்த வழியாக வரும் கனரக வாகனங்கள் பாலத்தின் மீது செல்ல வேண்டாம் என்று நெடுஞ்சாலை துறை எச்சரிக்கை பலகை வைத்திருந்தது.

  ஆனால் அப்பகுதியில் செயல்பட்டு வரும் மணல் கிராவல் குவாரிக்கு சொந்தமான லாரிகள் இதனை மதிக்காமல் பயணித்து வந்தனர்.

  இந்நிலையில் குவாரியில் இருந்து கிராவல் மண் ஏற்றி கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்று பாலத்தின் மீது செல்லும் போது பாரம் தாங்காமல் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தின் மீது விழுந்த பள்ளதில் லாரி செங்குத்தாக  சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில் லாரி டிரைவர் உயிர் தப்பினார்.