முந்திரி தோப்பில் அதிமுக பிரமுகர் கொலை!

முந்திரி தோப்பில் அதிமுக பிரமுகர் கொலை!

இ.முகமது இக்பால்,

முந்திரி தோப்பில் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக பிரமுகர் ஒருவர் கொலை செய்து எரிக்கப்பட்டிருக்கிறார்.

 கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த எம்.வீராரெட்டிகுப்பம் கிராமத் தைச் சேர்ந்தவர் கதிர்காமன், அவருக்கு வயது 43. அதிமுக நிர்வாகியான இவர் நேற்று முன்தினம் இரவு அதே கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோருடன் முதனை கிராம முந்திரித் தோப்புக்குச் சென்று, மது அருந்தியிருக்கிறார்.

 அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

 இதையடுத்து, கதிர்காமன் மனைவி மற்றும் உறவினர்கள் முந்திரித் தோப்புக்குச் சென்று பார்த்தபோது, அங்கு கதிர்காமன் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

 இது குறித்து  ஊமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிந்தவுடன், கதிர்காமன் உடலைமீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

   தொடர்ந்து, கடலூர் எஸ்.பி.ஜெயக்குமார், டிஎஸ்பி சபியுல்லா ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.

பின்னர், பிரபாகரனைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

   விசராணையில்,ராணுவ வீரர் பாலகிருஷ்ணன், பிரபாகரனை கொலை செய்து, அவரது உடலை எரித்தது உறுதியானதால் பாலகிருஷ்ணனை தேடுகிறார்கள்