ஆங்கிலேயர் கால 16 கண் நீர் வடிகால் பாலம் எங்கே? ஆட்சியரின் புகார் மனு!

ஆங்கிலேயர் கால 16 கண் நீர் வடிகால் பாலம் எங்கே? ஆட்சியரின் புகார் மனு!

கு.அசோக்,

அம்பேத்கர் மக்கள் படையின் நிறுவனர் டாக்டர் மதிபறையனார் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

 வேலூர்மாவட்டம், வேலூரில் ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் மக்கள் படையின் நிறுவனர் டாக்டர் மதிபறையனார் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

 பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் கோரிக்கை மனுவினை அளித்தனர். இதில் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பெங்களூர் நெடுஞ்சாலையில் ஆங்கிலேயர் ஆட்சியில் 16 கண்கள் கொண்ட ஒரு நீர் வடிகால் பாலம் ஒன்று இருந்தது.

 இது தற்போது முழுமையாக மூடப்பட்டுவிட்டது இதனால் மழைநீர் அந்த பாலத்தில் செல்லாததால் குடியிருப்பு பகுதிகளான திடீர் நகர், பெரியார் நகர், சம்பத் நகர்,இந்திராநகர்,முள்ளிப்பாளையம் ,சேண்பாக்கம் ஆகிய பகுதியில் வீடுகளில் தண்ணீர் புகுந்துவிடுகிறது.

 இந்த பாலத்தை அடைத்து ஆக்கிமிப்பு செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அந்த பாலத்தை மழைநீர் கால்வாயாக பயன்படுத்த மீட்டுத்தர வேண்டுமென கோரிக்கை மனுவில் கேட்டுக் கொண்டிருந்தனர்.