ரூ.2.54 கோடி மதிப்பிலான செல்போன்கள் கண்டுபிடித்து ஒப்படைப்பு! உரியவர்களிடம் வழங்கினார் வேலூர் எஸ்.பி.!

ரூ.2.54 கோடி மதிப்பிலான செல்போன்கள் கண்டுபிடித்து ஒப்படைப்பு! உரியவர்களிடம் வழங்கினார் வேலூர் எஸ்.பி.!

கு.அசோக்,

  காணாமல் போன மற்றும் திருடு போன 232 செல் போன்கள் இன்று உரியவர்களிடம் வேலூர் எஸ்.பி தலைமையில் ஒப்படைக்கப்பட்டது.

 வேலூ£ ¢மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் செல்போன்கள் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

 இம்மாவட்டத்தில் களவு போன மற்றும் காணாமல்போன செல் போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

  செல் டிராக் செயலி மூலம் 160 புகார்கள் பெறப்பட்டு அதில் 110 செல் போன் கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல், சி.இ.ஐ.ஆர் போர்டல் மூலம் 180 புகார்கள் பெறப்பட்டு 122 செல் போன்கள் அதில் கண்டுபிடிக்கப்பட்டது.  ஆக மொத்தம் 232 செல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 இதன் மதிப்பு ரூ.70,51000, ஆகும். மேலும் இதுவரையில் மொத்தம் ரூ.2.54 கோடி மதிப்பிலான செல்போன்கள் கண்டுபிடித்து ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.