போதையில் கொலையா? தற்கொலையா? போலீசார் குழப்பம்!

போதையில் கொலையா? தற்கொலையா? போலீசார் குழப்பம்!

ஜி.கே.சேகரன்,

 புதுக்கோட்டை பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போன நபர் விவசாய கிணற்றில் சடலமாக மீட்பு கிராமிய போலீசார் விசாரணை.

  திருப்பத்தூர் மாவட்டம், சிவராஜ் பேட்டை, தனகோடிநகர் பகுதியை சேர்ந்த தேவராஜ் மகன் ஸ்ரீதர் (45 ).

  இவா,¢ வெங்கடேசன் என்பவருடன் சரக்கடிப்பதற்காக திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை ஏரி பகுதிக்கு சென்றுள்ளார்.

  அப்போது ஸ்ரீதருக்கு போதை அதிகமாகி விட்ட காரணத்தினால் அவரை அங்கேயே விட்டுவிட்டு வெங்கடேசன் என்பவர் மட்டும் வீட்டிற்கு சென்றுவிட்டார். இது குறித்து ஸ்ரீதரி  மனைவியிடம் தகவலை கூறியதாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீதர் வீடு திரும்பவில்லை. அதன்பின்பு ஸ்ரீதர் மது அருந்திய இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அவருடைய குடும்பத்தார் அவரை தேடிவந்த நிலையில் வியாழக்கிழமை இன்று காலை 6 மணி அளவில் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சடலமாக கிடந்தார்.

  தகவலின் அடிப்படையில் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

  அதன்பின் தீயணைப்புத் துறையினர் விவசாய கிணற்றில் இருந்த ஆண் சடலத்தை கைப்பற்றி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அதன் பின் சடலத்தை ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  மேலும்  திருப்பத்தூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.