மகளிர் காவல் நிலைய போலீசாரின் கட்ட பஞ்சாயத்து! வாலிபர் தற்கொலை!

ஜி.கே.சேகரன்,
ஏலகிரி மலையில் மனைவி வாழ மறுத்ததால் மன உளைச்சலில் இருந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை ஏலகிரிமலை போலீசார் விசாரணை.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மிட்டூர் அருகே மலையாண்டியூர் பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் திருப்பதி(32).
இவருக்கும் பாச்சல் பகுதியை சேர்ந்த மீனா(30 ) என்பவர்க்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகும் நிலையில் 5 வயதில் பெண்குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் கட்டிட வேலை செய்து வந்துள்ளனர்.
கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு மீனா தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாச்சல் பகுதியில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அப்படியிருக்க, ஏலகிரி மலையில் நடைபெற்று வரும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவருக்கு சொந்தமாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் திருப்பதி தங்கிக்கொண்டு கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.
அதனை தொடர்ந்து கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை திருப்பதி தன்னுடைய மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார்மனு அளித்துள்ளார்.
அதன் பேரில் இருவரையும் வரவழைத்து மகளிர் காவல் நிலையத்தில் கட்டபஞ்சாயத்தில் ஈடுபட்டனர். போலீசார் மீனாவுக்கு சாதகமாக பேசி அவரை அனுப்பிவைத்ததாக தெரிகிறது.
இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த திருப்பதி மது அருந்திவிட்டு மது போதையில் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து உடனடியாக ஏலகிரிமலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதே பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து ஏலகிரிமலை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பல்வேறு கோணங்களில் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.