சமமாக நல திட்டங்களை வழங்குவது தான் திராவிட மாடல் அரசு!அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூரில் பல்வேறு துறைகள் சார்பில் 2333 பயனாளிகளுக்கு 36 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் எவ.வேலு - எந்த பாகுபாடுமில்லாமல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல் அரசு என பேச்சு.
தமிழக முழுவதும் முதலமைச்சர் மு.கஸ்டாலினால் கொண்டுவரப்பட்ட மக்களுடன் முதல்வர் மற்றும் மக்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு அதன் பேரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார்.
அப்போது அவர், 2333 பயனாளிகளுக்கு 36 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் வருவாய் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முதன்மை, தொழிலாளர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட 13 துறைகளில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும் பல்துறை சார்ந்த முடிவுற்ற கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், முகமை திட்ட அலுவலர் உமாமகேஸ்வரி, மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் அமைச்சர் வேலு பேசுகையில் எல்லோருக்கும் எல்லாம் என்பது தான் இந்த அரசின் நோக்கம். ஜாதி மத பாகுபாடு ஏழை பணக்காரன் பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் சமமாக நல்ல திட்டங்களை வழங்குவது தான் திராவிட மாடல் அரசு. அதன்படி இன்று 2333 பயனாளிகளுக்கு 36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என பேசினார்.