உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் நம் நாட்டிலேயே இனி படிக்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு!

உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் நம் நாட்டிலேயே இனி படிக்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு!

ம.பா.கெஜராஜ்,

 போர் மூண்டுள்ள உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த  இந்திய மாணவர்கள் தப்பி தாயகம் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். எஞ்சியுள்ள அவர்களது மருத்துவர் கனவு கானல் நீராகுமே என்கிற கவலை மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஏற்பட்டிருந்தது.

 இந்நிலையில் உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் இனி இந்தியாவில் தொடர்ந்து படிக்கலாம், அதற்கு எப்.எம்.ஜி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது பற்றின விவரம் வருமாறு,

 ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்து 9-வது நாளாக தாக்குதலை நடத்தியது. இன்றும் ரஷியா படைகள் ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

  இந்த சூழலில் உக்ரைனில் மருத்துவம் பயில சென்ற  மருத்துவ மாணவர்கள், ருமேனியா மற்றும் போலாந்து ஆகிய நாட்டின் வாயிலாக இந்தியா அழைத்து வரப்பட்டனர்.வங்கு 7 கல்லூரிகளில் சுமார் சுமார் இருபது ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியமாணவர்கள் பயின்று வந்தனர் என்பதும்,  ரஷியா நடத்திய தாக்குதலில், கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  அப்படியிருக்க உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதையடுத்து மாணவர்களும் பெற்றோர்களும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

  இந்நிலையில் இந்திய மருத்துவ ஒழுங்குமறைய அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், உக்ரைனில் போர் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில வெளிநாடுகளில் கொரோனா காரணமாக விதிகப்பட்ட தடைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனால் அங்கே மருத்துவக் கல்வி முடித்து பயிற்சி மருத்துவம் செய்து கொண்டிருந்த மாணவர்கள் அதை பாதியிலேயே விட்டுவிட்டு தாயகம் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.

 இந்த மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் இந்தியாவிலேயே தங்களின் பயிற்சி மருத்துவத்தப் படிப்பை மேற்கொள்ள அனுமதிக்கப் படுகின்றனர். அதற்காக வெளிநாட்டில் படித்த மாணவர்கள் எப்.எம்.ஜி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த கோரிக்கைகளோடு வரும் விண்ணப்பங்களை மாநில அரசுகளின் மருத்துவக் கவுன்சில்களே பரிசீலித்து நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

  மாநில மருத்துவக் கவுன்சில்கள், தேசிய தேர்வு வாரியத்தின் மூலம் எப்எம்ஜி மருத்துவ தகுதித் தேர்வை நடத்த உறுதி செய்யலாம். விண்ணப்பதாரர் குறிப்பிட்ட தகுதியுடையவராக இருந்தால் அவருக்கு தற்காலிக பதிவை மாநில மருத்துவக் கவுன்சில்கள் வழங்கலாம். அதன்படி, மாணவர்கள் 12 மாதங்களுக்கு பயிற்சி மருத்துவம் பயிலவோ அல்லது அவர்கள் ஏற்கெனவே முடித்ததிலிருந்து எஞ்சியுள்ள காலத்திற்கான பயிற்சி மருத்துவத்தை இங்கே பயிலலாம்.

இந்த பயிற்சிக் காலத்தில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதேபோல் மற்ற மருத்துவர்களுக்கு நிகராகவே ஊக்கத் தொகையையும் வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உக்ரைனிலிருந்து காப்பாற்றி அழைத்து வரப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு எதிர்காலத்தை அளிக்கும் அல்லவா.