எங்க....வை கூட்டினு போய் என்ன செய்தே இன்ஸ்பெக்டரை தாக்க முயன்ற போதை பார்ட்டி!
ஜி.கே.சேகரன்,
விடியோ.யுவராஜ்,
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் மது மற்றும் கஞ்சா போதையில் இளைஞர்கள் சிலர் ரகளையில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. போதை தலைக்கேறிய நிலையில் அவர்கள் பொதுமக்களிடமும் காவல்துறையினரிடமும் தகராறு செய்யும் சம்பவங்கள் தொடர்கதை ஆகி வருகிறது.
அப்படியிருக்க நேற்று மாலை (மே.10) ஆம்பூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அய்யனூர் - விண்ணமங்கலம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கண்ணாடி குப்பம் ராஜா மகன் அப்பு வயது அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் சஞ்சய் ஆகிய இருவரும் குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூறு செய்த கொண்டிருந்தனர்.
அவர்களை இன்ஸ்பெக்டர் கைது செய்ய முயன்ற போது அதில் ஒருவன் எங்க...கூட்டிட்டு போய் என்ன செய்தே என்று திரும்ப திரும்ப கேட்டவாறு இன்ஸ்பெக்டரை அடிக்க பாய்ந்தார்.
அதன் பின்னர் அவர்களை கைது செய்து அவர்கள் மீது 71.சி. சட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்து ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.