மழையால் சில்லென்று மாறிய திருப்பத்தூர்!

கு.அசோக்,
தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்து வந்தாலும் கூட மற்றொரு புறம் கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
அதில் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியட்ய்ந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த வாரங்களாக 107 முதல் 108 டிகிரி வரை கடந்து வெப்பம் பதிவாகியுள்ளன இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனா. ¢ இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர். ஜோலார்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளிலும், ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம், பால்னாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரமாக மழை கொட்டி தீர்த்தது.
இந்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சிறுவர்கள் மழை நீரை கையில் பிடித்து விளையாடினர்.