கழிவறைக்கு சென்றவரை கொன்ற நாகம்!

கழிவறைக்கு சென்றவரை கொன்ற நாகம்!

கு.அசோக்,

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கன்றாம்பள்ளியை கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (38) கட்டிட தொழிலாளியான இவர், இன்று காலை தனது வீட்டின் வெளிபுறம் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.

 அப்பொழுது கழிவறையை திறந்த போது, கழிவறையில் பதுங்கியிருந்த பாம்பை விஜயகுமார் எதிர்பாராவிதமாக மிதித்துள்ளார். இதனை தொடர்ந்து பாம்பு விஜயகுமாரை கொத்தியது.

 இதனால் மயக்கமடைந்த விஜயகுமாரை அவரது குடும்பத்தினர், சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு விஜயகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தகவலறிந்த உமராபாத் காவல்துறையினர்  விஜயகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.