ஹெலிகாப்டர் பறப்பதில் கோளாறு... நூலிழையில் தப்பிய அமித்ஷா!

ஹெலிகாப்டர் பறப்பதில் கோளாறு... நூலிழையில் தப்பிய அமித்ஷா!

Nresh.N.

 பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயணம் செய்து வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.     அவர் சென்ற ஹெலிகாப்டர் மிகப்பெரிய விபத்தில் இருந்து தப்பியது.

 தேர்தல் பிரச்சாரத்துக்காக பீகார் மாநிலத்தின் பெகுசராய் பகுதியில் இருந்து அமித் ஷா அவரது தனி ஹெலிகாப்டரில் புறபட்டார்.

 அப்போது, அங்கு பலத்த காற்று வீசியதாக சொல்லப்படுகிறது. ஹெலிகாப்டர் அப்பகுதியில் இருந்து கிளம்பியபோது பைலட் அதன் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறார். நிலை தடுமாறிய ஹெலிகாப்டர் தரையில் இருந்து பறந்து சில வினாடிகளுக்கு மேலே பறக்கவும் இல்லாமல் தரையை அடையவும் இல்லாமல் தடுமாறியது.

 அதன் பின்னரே ஹெலிகாப்டர் பறந்தது. இதனால் மிகப்பெரிய ஹெலிகாப்டர் விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டு இருக்கிறது. இது அங்கு வீசிய பலத்த காற்றினால் ஏற்பட்டதா அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கிறாதா என விசாரணை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டு இருக்கிறது.