பள்ளத்தையும் தாண்டி மக்காச் சோளப்பயிரை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள்!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே அறுவடையிற்கு தயாராக இருந்த 15 ஏக்கர் மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியிருக்கிறது. இதனால் விவசாயி பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளார். ஆகவே அவர்கள் உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை முன் வைத்திருக்கிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மரிமானிகுப்பம் நீலிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் அதே பகுதியில் உள்ள நஞ்சுண்டப்பா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை குத்தகை பெற்று, சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் மக்காளச்சோளம் பயிரிட்டிருந்தார்.
வனப்பகுதியையொட்டியுள்ள இந்த நிலத்தில் காட்டுபன்றிகள் தொல்லை அதிகமாக இருப்பதால், சக்திவேல் சுமார் 2 லட்சம் செலவில் விவசாய நிலத்தை சுற்றி காட்டுப்பன்றிகள் நுழையாத வண்ணம் பள்ளமும் தோண்டி வை த்திருக்கிறார்.
ஆனால் காட்டுப் பன்றிகள் அதனையும் மீறி அறுவடையிற்காக தயாராக இருந்த மக்காச்சோளப்பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.
இது குறித்து ஆலங்காயம் வனத்துறையினர் மற்றும் வருவாய்துறை நிலப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில்,காட்டுப்பன்றிகள் விவசாய நிலத்திற்கு வராத வண்ணம் உரிய நடவடிக்கை எடுத்து, காட்டுப்பன்றியால் சேதமடைந்த மக்களாச்சோளப்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார். சேதமான பயிருக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என்கிறார் பரிதாபமாக.