புதிய கல்வி கொள்கை திட்டத்துக்கு அரசு எதிர்ப்பு! ஒரு பேராசிரியர் ஆதரவு!

புதிய கல்வி கொள்கை திட்டத்துக்கு அரசு எதிர்ப்பு! ஒரு பேராசிரியர் ஆதரவு!

கு.அசோக்,

புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்றுகொண்டால் தான் கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவை கண்டித்து திராவிட கழகத்தினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

 வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிருல் திராவிட கழக இளைஞரணி மற்றும் மாணவரணியின் சார்பில் இந்த கண்டன ஆர்பாட்டமானது நடைபெற்றது.

 இளைஞரணி செயலாளர் தமிழ் தரணி தலைமையில் நடைபெற்ற இதில் புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி ஒதுக்கீடு செய்யபடும் என்ற மத்திய அரசின் முடிவை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

 இந்த ஆர்பாட்டத்தில் திமுக அவைத்தலைவர் முகமது சகி,மதிமுக மாநகர செயலாளர் கோபி ,கம்யூனிஸ்ட் நிர்வாகி மணி உள்ளிட்டோர் திரளானோர் பங்கேற்றனர்.

 ஆக, புதிய கல்வி கொள்கை திட்டத்தை மாநில அரசு ஏற்காத நிலையில், அதை ஏற்கும் விதமாக அரசு நிதியுதவி பெறும் ஒரு கல்லூரியின் பேராசிரியர் செயல்பட்டிருக்கிறார்.

 அந்த பேராசிரியர் சுமார் 4 லட்சத்தை வசூல் செய்து பன்னாட்டு கருத்தரங்கு என்கிற பெயரில் ஒரு கூட்டத்தை நடத்தியிருக்கிறார். ஆனால் அயல் நாட்டவர் ஒருவர் கூட அதில் பங்கேற்கவில்லை.

 மாநில கருத்தரங்கு, தேசிய கருத்தரங்கு மற்றும் பன்னாட்டு கருத்தரங்கு என்று நடத்தப்படுவது வழக்கம். அப்படி நடத்தப்படும் போது அந்தந்த தலைப்புக்கேற்ப மாநில அளவிலும், தேசிய அளவிலும், பன்னாநாட்டு அளவிலும் பங்கேற்பார்கள்.

 ஆனால் இவர் பன்னாட்டு நிறுவனம் என்று பெயரை வைத்துக்கொண்டு ரோட்டரி கிளப்,,, கோவில் நிர்வாகம் மற்றும் கல்லூரியையும் ஏமாற்றியிருக்கிறார்.

  அதுமட்டுமல்ல அந்த கருத்தரங்கில் தேசிய கல்விகொள்கை திட்டத்தை குறித்து புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

  என்ன ஒரு பாசம் என்ன ஒரு அன்பு பாருங்க அவருக்கு?