போதை ஆசிரியரை ஓட ஓட விரட்டிய மாணவ சிறார்கள்!

நரேஷ்.என்,

சரக்கு அடித்து விட்டு தினந்தோறும் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த ஆசிரியரை மாணவ செல்வங்கள் விரட்டியடித்தனர்.

இந்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலம், பஸ்டர் மாவட்டத்தில் உள்ள பாலி பட்டா தொடக்கப்பள்ளியில் நடந்திருக்கிறது.

 இந்தத் தொடக்கப் பள்ளியில் சுமார் 60 சிறார்கள் படித்து வருகிறார்கள்.

அப்படி இருக்க அந்தப் பள்ளியின் ஆசிரியர் தினந்தோறும் குடித்துவிட்டு தான் பள்ளிக்கூடத்துக்கே வருவார்.

வந்தவுடன் தரையில் படுத்து உறங்கி விடுவாராம்.பாடம் எதையும் நடத்துவதே இல்லை.

இந்நிலையில் இன்று சில குழந்தைகள்  அவரை எழுப்பி உள்ளனர், அதனால் கோபம் அடைந்த போதை ஆசிரியர் அவர்களை தகாத வார்த்தையால் திட்டி இருக்கிறார்.

இதனால் வெறுப்படைந்த குழந்தைகள் ஒன்று சேர்ந்து ஆசிரியரை விரட்டி உள்ளனர்.

போதை ஆசிரியர் குழந்தைகளிடமிருந்து தப்பித்தால் போதும் என்று பைக்கை எடுத்துக் கொண்டு பறந்து விட்டார்.

இருப்பினும் அவரை செருப்பு கல் கொண்டு வீசி குழந்தைகள் துரத்தினர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.