பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் சிறுமிக்கு ஏற்பட்ட விபத்து!

பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் சிறுமிக்கு ஏற்பட்ட விபத்து!

  ஜி.கே.சேகரன்,

  தனியார் பள்ளி பேருந்தில், இருந்து கீழே இறங்கி சாலையை கடக்க முயன்ற 1ஆம் வகுப்பு  மாணவியின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து,படுகாயங்களுடன் பள்ளி மாணவி  தனியார் மருத்துவமனையில் அனுமதி..

  திருப்பத்தூ£ ¢மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் ஹேமா ஸ்ரீ அதே பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் 1 ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில், ஹேமா ஸ்ரீ  பள்ளி முடித்துவிட்டு மாணவி தனியார் பள்ளி வாகனம் மூலம் வீட்டிற்கு திரும்பினார்.

 அப்போது, வீட்டின் அருகே பள்ளி வாகனம் நிறுத்தப்பட்டு, மாணவி ஹேமா ஸ்ரீ பள்ளி வாகனத்திலிருந்து இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம்  ஹேமா ஸ்ரீயின் மீது மோதியுள்ளது.

  இதில் ஹேமா ஸ்ரீ தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில்,உடனடியாக மாணவியை மீட்ட அப்பகுதிமக்கள் மாணவியை  சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 அங்கு மாணவியிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதனை தொடர்ந்து  தனியார் பள்ளி வாகனத்தை சிறைபிடித்த அப்பகுதி மக்கள்  மாணவியை  அஜாக்கிரதையாக சாலையை கடக்க வைத்ததாக கூறி தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

  இவ்விபத்து குறித்து தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் , இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளரிடம், விசாரணை மேற்க்கொண்டனர்.

   பள்ளி மாணவி மீது மோதிவிட்டு தப்பியோடிய  இருசக்கர வாகன ஓட்டியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.