மருமகளை தாக்கிய மகனை வெட்டி கொன்ற தந்தை!

கு.அசோக்,
வாணியம்பாடி அருகே குடிபோதையில் தினமும் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்த மகனை மருமகள் உதவியுடன் கொலை செய்த தந்தை உட்பட இருவர் கைது திம்மம்பேட்டை காவல் துறையினர் நடவடிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சொரக்காயல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 44) இவரது மனைவி லட்சுமி ( 40) இவர்களுக்கு 2பெண் மற்றும் 1ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் தினந்தோறும் சசிகுமார் குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறு ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்ந்து நேற்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அவர் மனைவியை பிடித்து இரவு முழுவதும் சரமாரியாக தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த சசிகுமாரின் தந்தை சுப்பிரமணி (வயது 70) மற்றும் மனைவி லட்சுமி ஆகியோர் சசிகுமார் அறிவாளால் வெட்டி சசிகுமாரை படுகொலை செய்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற திம்மம்பேட்டை காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு மனைவி லட்சுமி மற்றும் தந்தை சுப்பிரமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.