ஜேசிபி மீது மோதிய பேருந்து! 10 பேர் காயம்!
ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே தனியார் பேருந்து ஜேசிபி மீது மோதல் பேருந்தில் பயணம் செய்த 10 க்கு மேற்பட்ட பயணிகள் காயம்.
வேலூரில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு ஒரு தனியார் பேருந்து திருப்பத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.இந்த பேருந்தில் 40 க்கு மேற்பட்ட பயணிகள் பயனம் செய்துள்ளனர்.இந்த நிலையில் அந்த தனியார் பேருந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் அருகே உள்ள சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது அங்கு சாலை போடும் பணி பணிகளில் ஈடுபட்டிருந்த ஜே சி பி இயந்திரம் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள்சிவா,அக்ஷயா,ஸ்வேதா,தீபிகா,கோகிலா,யாசினி,செல்வி,ஜெயக்குமார் உட்பட 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
விபத்து ஏற்பட்ட உடன் அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல கொடுத்து விட்டு படுகாயமடைந்த பயணிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்தஅனைவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து வாணியம்பாடி கிராமிய போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.