சுதந்திர போராட்ட வீரர் அண்ணல் தங்கோ சிலையை முதல்வர் திறந்தார்!

ஜி.கே.சேகரன்,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திரப் போராட்ட வீரர் அண்ணல் தங்கோ அவர்களின் திருவுருவ சிலையை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர், மாலதி அவர்கள் அன்னாரின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
வேலூர்மாவட்டம், குடியாத்தம் நகராட்சி பூங்காவில், சுதந்திர போராட்ட தியாகியும், தமிழ் பற்றாளருமான அண்ணல் தங்கோ அவர்களின் சிலை புதியதாக நிறுவப்பட்டுள்ளது. அந்த உருவ சிலையை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தொடர்ந்து வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி அவர்கள் அன்னாரின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா, நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன், ஒன்றியக்குழுத் தலைவர் சத்யானந்தம், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி, நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் மற்றும் அண்ணல் தங்கோ அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.