கறுப்புக்கொடியுடன் சென்ற காங்கிரஸாரை தடுத்த வேலூர் போலிசார்!

கு.அசோக்,
இராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை அரசைக் கண்டித்தும், அவர்களை உடனடியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரியுய்தும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திலிருந்து காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடிகளுடன் ஊர்வலமாக செல்ல முயன்றனர். கையில் கருப்பு கொடி எடுத்து செல்ல அனுமதியில்லை என கூறி அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அதனையடுத்து, காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடிகளை கீழே வைத்து விட்டு காங்கிரஸ் கட்சி கொடியுடன் நடை போட்டனர். பின்னர் மாவட்டத்தலைவர் டீக்காராமன் தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், இலங்கை அரசையும் மத்திய அரசையும் கண்டித்தும், பாஜக அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.
இதில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்டத்தலைவர் வாஹீத் பாஷா மற்றும் எஸ்.சி.எஸ்டி துறை மாநில செயலாளர் சித்தரஞ்சன் உள்ளிட்ட திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.