டிராக்டர் ஓட்டும் 13 வயது சிறுவன்!

டிராக்டர் ஓட்டும் 13 வயது சிறுவன்!

G.K.Sekaran,

  நாட்றம்பள்ளி அருகே ஆபத்தான முறையில் டிராக்டர் ஓட்டும் 13 வயது சிறுவன்! பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

  திருப்பத்துர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியை சேர்ந்தவர். சக்திவேல் இவர் டிராக்டர் மூலம் தண்ணீர் சப்ளை தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று வௌக்கல்நாத்தம் பகுதியில் இருந்து புதுப்பேட்டை செல்லும் சாலையில் சாலை போடும் வேலை நடைபெற்று வருகிறது. அதற்கு தண்ணீர் விட்டு சென்ற சக்தி வேல் அடுத்த முறை தன்னுடைய மகனான 13 வயதே ஆன திலிப்குமாரை டிராக்டரில் தண்ணீர் விட அனுப்பியுள்ளார். அவ்வளவு பெரிய வண்டியை அச்சிறுவன் அசால்டாக பயமறியாமல் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டி சென்றான்.

  இதை பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபோல் சிறுவர்களிடம் வாகனங்களை கொடுத்து அனுப்பும் பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார்ப்போரின் கோரிக்கையாக உள்ளது.