செருப்பால் அடிப்பேன்...நானும் சீமான் போல் பேசுவேன்! நிருபர்களிடம் பொங்கிய திருநாவுக்கரசர்!

டி.இ.முகமது,
திருச்சி எம்பியாக இருக்கும் திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தால் பிற கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் சேர்வார்கள் என்று பாஜகவினர் சொல்கிறார்கள் அதன் வரிசையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாக உங்களது பெயரையும் சொல்கிறார்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதைக்கேட்டு முகம் மாறிய திருநாவுக்கரசர் "அப்படி சொல்பவர்களை செருப்பால அடிப்பேன். இனிமேல் சீமான் போல பேசலாம் என்று முடிவெடுத்து விட்டேன் என கடுகடுத்தார்.
அப்போதும் விடாத அந்த நிருபர் நீங்கள் தொகுதி பக்கமே வருவதில்லை என்று "கண்டால் வரச்சொல்லுங்க" என்கிற வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்களே என கேள்வியெழுப்பினார்.
கோபத்தின் உச்சிக்கு போன திருநாவுக்கரசர், அந்த போஸ்ட்டரை நீ மட்டும்தான் பார்த்தியா? இந்த கேள்வி கேட்க நீ எவ்வளவு பணம் வாங்கினாய்? முதல்ல நீ பேசறத நிறுத்து. நிருபர்ன்னா என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்பியா போயா என்று சொல்லிவிட்டு சென்றார்.