தமிழறிஞர் மு.வரதராசனார் சிலையை முதல்வர் திறந்தார்! வாரிசுகளுக்கு மரியாதை!

தமிழறிஞர் மு.வரதராசனார் சிலையை முதல்வர் திறந்தார்! வாரிசுகளுக்கு மரியாதை!

 கு.அசோக்,

இராணிப்பேட்டையில் புதியதாக கட்டப்பட்ட தமிழறிஞர் டாக்டர் மு வரதராசனரின் வெங்கல சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சிகளாக திறந்து வைத்தார்

  இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை உழவர் சந்தை அருகே செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ரூபாய் 65.77 லட்சம் மதிப்பீட்டில்  தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனரின் 7 அடி உயர கொண்ட முழு திருவுருவ வெங்கல சிலையுடன் கூடிய குவிமாடம் அரங்கம் திறக்கும் விழா மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

   இதில் புதியதாக கட்டப்பட்ட தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனர் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தா£.¢ தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வளர்மதிமு.வரதராசனுடைய வாரிசுதாரர்கள், அரசு அதிகாரிகள், அனைவரும் தமிழறிஞர் டாக்டர் மு வரதராசனர் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

 இந்த நிகழ்ச்சியில் தமிழறிஞர் டாகடர் மு.வரதராசனார் பேரப்பிள்ளைகள், உறவினர்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனர் வாலாஜாபேட்டை அருகே உள்ள வேலம் கிராமத்தில் பிறந்து, வாலாஜாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வியை கற்றவர் என குறிப்பிடத்தக்கது.

  இதில் நகர மன்ற தலைவர் சுஜாதாவினோத் துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா மற்றும் அரசு அதிகாரிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.