அதிமுக சுவர் விளம்பரம் எழுதக்கூடாதா? திமுக மட்டும் எழுதலாமா? அதிகாரியால் எழுந்த களேபரம்!!

ஜி.கே.சேகரன்,
பாலத்தின் பக்கவாட்டு சுவரில் எழுதப்படும் அதிமுக விளம்பரத்தை சாலை பணியாளர்கள் தடுத்ததால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம், வெங்களாபுரம் அருகே திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் இருக்கும் பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் அதிமுக சார்பாக விளம்பரம் எழுதும் பணி நடந்து கொண்டிருந்த நிலையில், திருப்பத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சீனிவாசன் உத்தரவின் பெயரில் சாலை பணியாளர்கள் சுவர் விளம்பரங்கள் எழுத கூடாது என்று தடுத்து நிறுத்தி உள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக நகர செயலாளர் குமார் தெற்கு ஒன்றிய செயலாளர் திருப்பதி தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபடும் பொழுது திமுகவினர் மட்டும் உதயநிதி ஸ்டாலின் வருகை சம்பந்தமாக திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள பாலங்களில் விளம்பரம் எழுதுகிறார்கள். நாங்கள் மட்டும் எழுதக் கூடாதா. ஆளும் கட்சிக்கு ஒரு நியாயம் எதிர்கட்சிக்கு ஒரு நியாயமா முதலில் திமுகவினரை அழிக்க சொல்லுங்கள் பின்பு நாங்கள் அழிக்கிறோம்.
எங்களை தடுத்தால் தீக்குளிப்பு இருக்கும் சாலை மறியல் இருக்கும் தமிழகம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று கூச்சலிட்டனர்.
இதனை தொடர்ந்து எழுதப்பட்ட இடத்தை மட்டும் விட்டு விடுகிறோம் என்று நெடுஞ்சாலை துறை சார்பாக கூறப்பட்டதால் பின்பு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.
ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடக்க இருக்கும் அதிமுக மாநாடு தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவினர் எடப்பாடி பல்லவியை பொது சுவற்றில் எழுதிய போதுதான் அதை அதிகாரிகள் தடுத்தனர்.