32 ஆண்களை திருமணம் செய்து முதலிரவு அன்றே கொள்ளையடித்த கில்லாடி பெண்!

உ.சசிக்குமார்,
32 ஆண்களை புரோக்கர்களின் உதவியுடன் திருமணம் செய்து முதலிரவு அன்றே கொள்ளையடித்து விட்டு கம்பி நீட்டியிருக்கிறார்.¢ ஒரு சாமர்த்திய பெண்.
ஜம்மு காஷ்மீர் புட்காம் மாவட்டத்தில் மட்டும் 12- க்கும் மேற்பட்ட ஆண்கள் தங்கள் மனைவியைக் காணவில்லை என்று புகார் கொடுக்க போலீஸ் நிலையத்திற்கு வந்த போது, புகாதாரர்கள் அனைவரின் மனைவியின் போட்டோவை போலீசார் சோதனை செய்த போது அது ஒரே பெண் தான் என்பது தெரிய வந்ததில் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த கில்லாடி பெண்ணின் பின்புலத்தில் பெரிய கும்பலே ஈடுபடுகின்றன. இதில் புரோக்கரின் பங்கு மிகப் பெரியது. குறிப்பாக பெண்ணின் காதலன் அல்லது கணவனும் இதில் ஈடுபடுகின்றனர். கல்யாணம் ஆகாத இளைஞர்களை தேடி அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது புரோக்கரின் வேலை. இதற்காகவும் மணமகன் வீட்டில் இருந்து பெரும் தொகையை புரோக்கர் வாங்கி கொள்கிறார்.
இதற்குப் பிறகு போலியான ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. பின்னர் முதலிரவு அன்றே மணப்பெண் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பணத்துடன் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார். சில நேரங்களில், சில நாட்கள், மாதங்கள் அல்லது வாய்ப்பு கிடைத்தவுடன், அதே போல் ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காஷ்மீரைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றி, ஒவ்வொரு முறையும் திருமணம் செய்துகொண்ட பிறகு நகை பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்று உள்ளார்.
ஆக அங்கு இதுதான் இப்போது டாக் ஆஃப் தி நியூஸாக உள்ளது.