போலிசுக்கு பயந்து மின்சாரத்தில் சிக்கி இறந்த சிறுவன்!

போலிசுக்கு பயந்து மின்சாரத்தில் சிக்கி இறந்த சிறுவன்!

 கு.அசோக்,

தண்டலம் அருகே குடும்ப தகராறு காரணமாக தந்தையை விசாரிக்க வந்த காவல்துறையினரின் விசாரணைக்கு பயந்து தந்தையுடன் மறைந்துக்கொள்ளச் சென்ற 8 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு,

 ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த தண்டலம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த தம்பதியர்களான துளசி (34) சங்கீதா(30) ஆகிய இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வருவது வழக்கமாக இருந்துள்ளது.

  இந்நிலையில் துளசி  ஃபுல்லா மது அருந்திவிட்டு தனது மனைவி சங்கீதாவிடம் தனி குடுத்தனம் செல்வது குறித்து தகராறு ஈடுபட்டதாகவும் இந்த தகராறு ஒரு கட்டத்தில் இருவருக்கும் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.

  இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா மற்றும் அவரது குடும்பத்தினர் இதுகுறித்து ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தன் பேரில், போலீசார் சங்கீதாவின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொள்ள சென்றுள்ளனா.

  ¢ அப்போது போலீசார் வருவதை கண்ட துளசி தனது 8 வயதுடைய மகன் மணிகண்டன் என்பவனை அழைத்துக் கொண்டு வீட்டின் பின்புறமாக உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று ருக்மணி என்பவரது வீட்டில் பின்புறம் பதுக்கியுள்ளார்.

   அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்சார ஒயர் கம்பியின் மீது உரசியதால் மணிகண்டன்  தவறுதலாக கையை வைத்ததில் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்துள்ளார் இதனைக் கண்ட துளசி கூச்சலிட்டு கதறியதும் சத்தத்தை கேட்ட போலீசார் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் உடனடியாக சென்று சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

  அப்போது அருகிலிருந்த போலீசார் மீதும் மின்சாரம் பாய்ந்ததால் துரிதமாக செயல்பட்டு பள்ளிச் சிறுவனை மீட்டு வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர்.

 அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

 இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்தோடு இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..