பாதுகாப்பு குறைபாடு! விநாயகர் சிலைகரைக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி!

பாதுகாப்பு குறைபாடு! விநாயகர் சிலைகரைக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி!

 ஜி.கே.சேகரன்,

வாணியம்பாடி அருகே ஆந்திராவின் புல்லூர் தடுப்பணையில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு மற்றொரு இளைஞர் நீரில் மூழ்கி மாயம்.

  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லை பகுதியான புல்லூர் தடுப்பணையில் பூவரசன்  மற்றும்  முரளி ஆகிய இரண்டு இளைஞர்கள் விநாயகர் சிலையை கரைத்தனர்.   அவர்கள் சிலைகளை கரைத்து கொண்டிருந்த போது முரளி என்ற இளைஞர் நீரில் மூழ்கியுள்ளார். அதைப்பார்த்த பூவரசன் என்ற இளைஞர் முரளியை காப்பாற்ற சென்றுள்ளா£.¢ அப்போது பூவரசன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

   இதைத்தொடர்ந்து நீரில் மூழ்கி மாயமான முரளி என்ற இளைஞரை ஆந்திர தமிழக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

 பூவரசன் இறப்பதற்கும் விநாயகர் சிலையை அணையில் கரைப்பதற்கும் முன்பாக மிகவும் மகிழ்ச்சியாக செல்போனில் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

  விநாயகர் சிலையை கரைக்க சென்றவர்  நீரில் மூழ்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் மாயமான முரளியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை மாயமான இளைஞரை தேடும் பணிகள் தொடர்கிறது.

   இந்த விபத்துக்கு பாதுகாப்பு குறைபாடுகளும் காரமாகும்.