மாயனத்தை தவிர்த்து மத்த இடம் பூரா பாலாற்றில் மணல் கொள்ளை!

ம.பா.கெஜராஜ்,
மாயனத்தை தவிர்த்து அதனை சுற்றியிருக்கும் இடம் பூராவும் பாலாற்றில் மணல் கொள்ளை நடந்துக் கொண்டிருக்கிறது. என்னதான் அது அனுமதிக்கப்பட்ட குவாரி என்றாலும், விதிமுறைகள் அங்கு பின்பற்றப்படவில்லை.
இது பற்றின விவரம் வருமாறு,
வேலூர் அடுத்த பெருமுகை ஊராட்சி அரும்பருத்தியில், பாலாற்றின் கரையோரம் மணல் குவாரி கடந்த ஏப்., 18ல் துவங்கப்பட்டது.இங்கு, ஓராண்டுக்கு 16 ஆயிரம் யூனிட் மட்டுமே மணல் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், 10 சதவீதம் மாட்டு வண்டிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. (ஆனால் மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை அலுவலர்கள் தேடித்தேடி பறிமுதல் செய்தனர்.).
இது தவிர, அரும்பருத்தி குவாரியில் இருந்து மணல் அள்ளி அவற்றை பெருமுகையிலுள்ள கிடங்கில் சேமித்து, அங்கிருந்து மட்டுமே யூனிட் 3,150 ரூபாய் என்ற வீதம் பொதுமக்களுக்கு மணல் விற்கவும் அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், பாலாற்றில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது தொடர்பாக, நவ., 1ல் நடந்த கிராம சபாவிலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பெருமுகை ஆற்றங்கரையோரம்மயானப் பகுதியில் ஏராளமான டிராக்டர்கள், லாரிகள் மூலம் மணல் அள்ளப்பட்டதுடன், அங்கிருந்த பனை மரங்களும் அடியோடு பெயர்த்து வீசப்பட்டன.இதையறிந்த பொதுமக்கள், கடந்த 8ல் போராட்டம் நடத்தினர்.
மயானத்தை மட்டும் தீவு போல விட்டு விட்டு, ராட்சத பள்ளம் தோண்டி மணல் எடுப்பதால், மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் வரும்போது, மயானத்தில் அடக்கம் செய்யப்படும் உடல்கள் இடம் பெயரும் அபாயம் உள்ளது.
இது மட்டுமன்றி இந்த குவாரியில் மணல் வாரி எடுத்துச்செல்ல சென்னையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் படையெடுத்து வருகின்றன.
இதனால் அலுமேலுமங்காபுரம் பாலத்தில் ஏகப்பட்ட போக்குவரத்து நெரிசல் ஏற்படுதிகிறது.
இவ்வளவு களேபரம் நடக்குது ஆனால் அங்கு ஒத்தை போலிஸ் கூட இல்லீங்க?