ஏரி கால்வாய் ஆக்கிமிப்புகளை அகற்றுங்க! இல்லையென்றால் காவல்துறையில் புகார்! ஆட்சியர் அதிரடி !

ஜி.கே.சேகரன்,
ஓட்டேரி ஏரியையும், நீர்வரத்து கால்வாய்களையும் கொட்டும் மழையிலும் பார்வையிட்டு ஆய்வு செய்தார் - ஏரிகால்வாய்களில் நீர் செல்வது குறித்தும் ஏரிகள் நிரம்புவது குறித்தும் பார்வையிட்டு பாலம் வேலைகளால் உள்ள தேவையற்றபொருட்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக பேட்டி,
வேலூர்மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகள் நிரம்பி வருகிறது. மேலும் சில ஏரிகள் 40- 60 சதவிகிதம் வரையில் நிரம்பியுள்ளது. இந்த நிலையில் ஓட்டேரி ஏரியை நிரப்பும் வகையில் ஏரி கால்வாய்கள் சரியாக உள்ளதா என வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. ஓட்டேரி ஏரிக்கு கொட்டும் மழையிலும் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது ஏரி கால்வாய் அருகே நடைபெறும் பாலப் பணியினால் கால்வாயினுள் போடப்பட்டுள்ள கற்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை அகற்றி ஏரிகால்வாய்க்கு நீர் செல்ல வழிவகை செய்ய வேண்டுமெனவும் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் மற்றும் வட்டாச்சியர் செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்
பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை நிரப்பும் வகையில் ஏரிகால்வாய்களில் தண்ணீர் செல்ல வழிவகை செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டு பணிகளும் நடந்து முடிந்தது ஏரிகால்வாய்கள் நீர் செல்லும் வகையில் உள்ளதா என ஆய்வு செய்தோம்.
ஏரிகளில் தண்ணீரை நிரப்பவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் ஆக்கிரமிப்புகள் ஏரிகால்வாய்களில் இருந்தால் மக்கள் அவர்களாகவே முன் வந்து அதனை அகற்ற வேண்டும் இல்லையென்றால் அவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கபடும் என்று கூறினார்
பின்னர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தம் 2023 தொடர்பாக வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அணில் மேஸ்ராம் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இந்த ஆய்வு கூட்டத்தில் வாக்காளர் வரைவு பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது.