சுடுகாடு சீர் செய்ய கோரி சாலை மறியல்!

ஜி.கே.சேகரன்,
குரும்பகேரி கிராமத்தில் சுடுகாடு சீர் செய்ய கோரி சாலை மறியல் நடத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், குரும்பகேரி கிராமத்தில் சுமார் 80 க்கும் மேற்ப்பட்ட குருமன்ஸ் இனமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் மூன்று தலைமுறையாக சுடுகாடு பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம், சிலமாதங்களுக்கு முன்பு கழிவு நீர் கால்வாய் அமைத்து வரும் கழிவு நீர் மற்றும் மழைநீர் ஆகியவற்றை சுடுகாட்டில் திருப்பி விட்டனராம்.
இதனால், சுடுகாட்டில் தண்ணீர் தேங்கி சடலங்கள் மிதக்குவதாக குற்றசாட்டு அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதுமட்டுமின்றி மழைநீர் கழிவு நீரால் தொற்று நோய் ஏற்ப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ¢ஊராட்சி நிர்வாகத்திடமும், கிராம சபை கூட்டத்தில் பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென்று ஜலக்காம் பாறை பகுதியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் மறியல் நடத்தினர்.
தகவல் தெரிந்து வந்த கிராமிய போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட வர்களிடம் ஊராட்சி நிறுவாகத்திடம் கூறி கழிவு நீரை அப்புறப்ப படுத்த நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுப்பதாக கூரியதின் அடிப்படையில் மறியலை கைவிட்டு சென்றனர்.