அரியவகை ஆந்தை!

கு.அசோக்,
காட்பாடி காந்தி நகர் பகுதியில் வீட்டில் இருந்த மரத்தில் இருந்து அரிய வகை ஆந்தை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகர் 10வது கிழக்கு குறுக்கு சாலையில் செல்லப்பா என்பவர் வசிக்கிறார். அவரது வீட்டில் உள்ள மரத்தில் நேற்று மாலையில் அரிய வகை ஆந்தை ஒன்று இருந்ததை கண்ட அவர் அதுவாக சென்று விடும் என்று காத்திருந்தார்.
ஆனால் அந்த ஆந்தை இன்று காலை அதே மரத்தில் அமர்ந்து இருந்ததை கண்ட செல்லப்பா காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பெயரில் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செல்லப்பா வீட்டிற்கு விரைந்து வந்து மரத்திலிருந்த அரிய வகை ஆந்தை பத்திரமாக மீட்டு கிறிஸ்டியான் பேட்டை காப்பு காட்டில் விட்டனர்.
இந்த ஆந்தையை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.