பைனான்சில் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியை தவிர மூவர் பிடிபட்டனர்!

பைனான்சில் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியை தவிர மூவர் பிடிபட்டனர்!

கு.அசோக்,

 பைனான்ஸ் நிறுவனத்தில் நுழைந்து 2 பேரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்-பைனான்ஸ் உரிமை யாளரிடம் 35 லட்சம் பணம் கேட்டோம் இல்லையென்றால் ஆவணங்களை எரித்து விடுவோம் மற்றும் கொலை மிரட்டல் கொடுத்தது தெரிய வந்தது... முக்கிய குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.   

 வேலூர் சைதாப்பேட் டையை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ரங்காபுரத்தில் ஆட்டோ பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு பிச்சாண்டி (வயது 45). கோபி (26) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

 கடந்த 1-ந் தேதி பைனான்ஸ் நிறுவனத்தில் பிச்சாண்டி கோபி ஆகியோர் பணியில் இருந்த போது, திடீரென அங்கு  வந்த மர்மநபர்கள் மூவர்  பிச்சாண்டி,கோபி ஆகியோரை கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர்.

 இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த சின்னராஜ், மாதேஸ்வரன் மற்றும் பைனான்ஸ் நிறுவன ஊழியர் கோபி, பொய்கையை சேர்ந்த தக்காளி மணி ஆகியவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

 இதனை அடுத்து போலீசார் சின்னராஜ், மாதேஸ்வரன், கோபி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

 கைதான ஊழியர் கோபி பைனான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ் இடம் மிரட்டி பணம் பறிக்க முடிவு செய்து,  அதற்காக அவர் தக்காளி மணியை கூட்டு சேர்த்துள்ளனர்.

 அவர்களின் திட்டப்படி ஆட்கள் இல்லாத நேரத்தில் மூன்று பேரும் பைனான்ஸ் அலுவலகத்தில் புகுந்து பிச்சாண்டி மற்றும்  கோபியை கத்தியால் லேசாக வெட்டிவிட்டு சில முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

 பின்னர் தக்காளி மணி செல்போனில் ரமேஷ் தொடர்புகொண்டு 35 லட்சம் கொடுத்தால் நிறுவனத்திலிருந்து திருடிய முக்கிய ஆவணங்களை திரும்ப கொடுப்போம், இல்லையென்றால் அதை எரித்து விடுவதாகவும்,   இது பற்றி போலீசுக்கு தெரிவித்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

 இருப்பினும் பைனான்ஸ் உரிமையாளர் போலீசுக்கு தகவல் அளித்தார்.

 பின்னர் தக்காளி மணியின் செல்போன் என்னை வைத்து போலீசார் அவனை நெருங்கினர்.

 இந்நிலையில் போலீஸ் நெருங்குவதை அறிந்ததும் மணி தலைமறைவாகிவிட்டார்.

 இந்த திட்டத்திற்கு தக்காளி மணிக்கு மாதேஸ்வரன் சிம்கார்ட்டும், சின்ராஜ் காரும் கொடுத்துள்ளார்.

   தற்போது பைனான்ஸ் நிறுவன ஊழியர் கோபி, மாதேஸ்வரன்,சின்னராஜ் மூன்று பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய நபரான தக்காளி மணியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.