இதல்லவா அறக்கட்டளை!

கு.அசோக்,
காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு கிராம மக்களே தங்கள் கிராமத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணியை துவங்கினார்கள்
வேலூர்மாவட்டம், ஒடுக்கத்தூர் அருகேயுள்ள அரிமலை ஊராட்சிக்குட்பட்ட கொல்லப்பள்ளி கிராமத்தில் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டும் எதிர்கால சந்ததியினர் இயற்கை வளங்களை பெற வேண்டும் என்ற அடிப்படையிலும் மரக்கன்றுகளை நட துவங்கியிருக்கிறார்கள்.
டிஜிட்டல் சௌவுத் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் கிராம மக்கள் தாங்களே முன் வந்து கொல்லப்பள்ளி கிராமத்தில் காளியம்மன் கோவில் வளாகம் மற்றும் மலை அடிவாரம் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சிகளை துவங்கினார்கள்.
இதில் புங்கன் வேம்பு,சப்போட்டா,சீத்தா,கொய்யா,கொன்றை ,நெல்லி,அரசமரம் ,உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை கிராம மக்கள் அவர்களாகவே முன் வந்து மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
மேலும் 100 நாள் வேலை ஆட்களை கொண்டும் மரகன்றுகளை நடவுள்ளனர்.
கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் நல்ல இயற்கையை வருங்கால சந்ததியினருக்கு உருவாக்கும் நோக்கில் அவர்களாகவே முன் வந்து மரம் நடும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
அறக்கட்டளை என்கிற பெயரில் தங்களையும், தங்களைச் சேர்ந்தவர்களையும் விளம்பரம் செய்துக்கொள்ளும் காலமிது. ஆனால் மேற்படி அறக்கட்டளையினர் மனதார மேற்கொண்டிருக்கும் இப்பணியைப் போன்றே ஒவ்வொரு கிராமங்களிலும் மக்களுடன் இணைந்து பணியாற்றினால் பல கிராமங்கள் பசுமையாகும் அல்லவா?